இடைத்தேர்தலில் உறுதியாக நாங்கள் நிற்போம்...கடுமையான பிரச்சாரத்தையும் முன்னெடுப்போம்!

இடைத்தேர்தலில் உறுதியாக நாங்கள் நிற்போம்...கடுமையான பிரச்சாரத்தையும் முன்னெடுப்போம்!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் ஓருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் :

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈ.வெ.ரா. மரணம் அடைந்ததை தொடர்ந்து, அங்கு வருகிற பிப்ரவரி மாதம் 27-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளது.

கடுமையாக பிரசாரம் மேற்கொள்வோம் :

நாம் தமிழர் கட்சியை பொருத்தவரை தமிழகத்தில் நடைபெற்ற அனைத்து சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தல்களிலும் தனித்து போட்டியிட்டு வருகிறது. அதன்படி, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலிலும் போட்டியிடப்போவதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.

இதையும் படிக்க : ஈரோடு இடைத்தேர்தலில் பாஜக தனித்து போட்டியா?

இது தொடர்பாக அவர் கூறியபோது, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி உறுதியாக களம் காணும் எனவும், தேர்தலில் வெற்றி பெறும் முனைப்புடன் கடுமையாக பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக கூறிய அவர், தமிழக மக்கள் விரும்பும் அரசியலை முன்னிறுத்தி வாக்கு கேட்போம் எனவும் தெரிவித்தார்.