நாகை: தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க போலிசார் ஒத்திகை..!

நாகை: தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க போலிசார் ஒத்திகை..!

நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க கடலோர பாதுகாப்பு போலீசார் படகு மூலம் ஒத்திகையில் ஈடுபட்டனர்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் கடலோரப் பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க சாகர்கவஜ் ஆப்ரேஷன் பாதுகாப்பு ஒத்திகை இன்று, நாளையும் இரு தினங்கள் நடைபெறுகிறது. 

ஆறுகாட்டுத்துறை கடற்பகுதியில் வேதாரண்யம்  கடலோர பாதுகாப்பு குழும டி.எஸ்.பி.சுந்தர் தலைமையில் கடலோர பாதுகாப்பு போலீசார் படகு மூலம் சென்று ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றனர் .

வேதாரண்யம் கடலோர மீனவ கிராமங்களான வெள்ளப்பள்ளம், புஷ்பவனம், நாலுவேதபதி, கோடியக்கரை, மணியன்தீவு போன்ற மீனவ கிராமங்களில் 40க்கும் மேற்பட்ட போலீசார் நான்கு குழுக்களாகப் பிரிந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். வழியில் தென்படும் மீனவர்களிடம் சந்தேகத்துக்கு இடமான நபர்கள் யாரேனும் தெரிந்தால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தர வேண்டும் என முன்னெச்சரிக்கை செய்து வருகின்றனர். 

கடலோர  பாதுகாப்பு குழும போலீசாரால் தீவிரவாதிகள்  ஊடுருவலை தடுக்க ஆண்டுதோறும் 
' சாகர்கவஜ் ஆபரேஷன் ' என்ற கடலோர பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது.

இதையும் படிக்க     |