தேசிய கட்சிகள் காலூன்ற  வாய்ப்பே இல்லை... முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேச்சு...

தமிழகத்தில் தேசிய கட்சி காலூன்ற வாய்ப்பில்லை என்பது காலம் காலமாக நிரூபிக்கப்பட்ட ஒன்று என்று தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

தேசிய கட்சிகள் காலூன்ற  வாய்ப்பே இல்லை... முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேச்சு...

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்ட மன்ற அலுவலகத்தில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜு தலைமையில் நடைபெற்றது. நகர்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. 

முன்னதாக அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டதை முன்னிட்டு பொதுமக்களுக்கு கடம்பூர் செ.ராஜூ தலைமையில் அதிமுகவினர் இனிப்பு வழங்கினர். 

இதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் தேர்தலில் அளித்த வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்றவில்லை. தொடர்ந்து அதிமுக வின் மீது பொய் வழக்குகள் போட்டு வருகிறது. தமிழகத்தில் தேசிய கட்சி காலூன்ற வாய்ப்பில்லை என்பது காலம் காலமாக நிரூபிக்கப்பட்ட ஒன்று. அதிமுக மாபெரும் இயக்கத்தை ஆட்டி பார்க்கவோ அசைத்து பார்க்கவோ முடியாத ஒன்று.

மழை வெள்ளத்தினால் ஏற்பட்டு பாதிப்பின் காரணமாக தற்போதைய திமுக அரசு எடுத்து வரும் நடவடிக்கை திருப்திகரமாக இல்லை என்றும், வெள்ளை அறிக்கை என்று வெளியிட்ட திமுக அரசு தற்போது புஸ்வானம் போல் ஆகிவிட்டது. நல்ல திட்டங்கள்,செயபடுகளை அதிமுக அரசு ஆதரிக்கும்..தமிழக மக்களை பாதிக்கும் பிரச்சினை என்றால் முதலில் குரல் கொடுப்போம் என்றார்.