இந்த இரண்டு மாவட்டங்களுக்கு இன்று அதிகனமழைக்கு வாய்ப்பு!

இந்த இரண்டு மாவட்டங்களுக்கு இன்று அதிகனமழைக்கு வாய்ப்பு!

நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஐந்து மாவட்டங்களுக்கு இன்றும் நாளையும் மிதமான மழை:

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 5 மாவட்டங்களில் இன்றும் நாளையும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இரண்டு மாவட்டங்களுக்கு அதிகனமழை:

நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று அதி கனமழை பெய்யலாம் எனவும் தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில் மிதமான மழை பெய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை  வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் எனவும் இன்று நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.