கர்ப்பிணி பெண்ணின் மாமியாருக்கும் அவரது மாமாவுக்கும் இடையே கள்ளக்காதல்...அத்தையிடம் காட்டிக் கொடுத்த... திடீரென தூக்கில் தொங்கிய நிறைமாத கர்ப்பிணி!! நடந்தது என்ன?

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே இன்று வளைகாப்பு நடைபெற இருந்த நிலையில் ஒன்பது மாத நிறைமாத கர்ப்பிணி மர்மமான முறையில் தூக்கிட்டு உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 

கர்ப்பிணி பெண்ணின் மாமியாருக்கும் அவரது மாமாவுக்கும் இடையே கள்ளக்காதல்...அத்தையிடம் காட்டிக் கொடுத்த... திடீரென தூக்கில் தொங்கிய  நிறைமாத கர்ப்பிணி!! நடந்தது என்ன?

அரூர் அருகேயுள்ள அச்சல்வாடி அடுத்த ஒடசல்பட்டி கிராமத்தைச் சார்ந்த ஜெயகுமார் என்பவருடைய மனைவி சோனியா கர்ப்பமாக இருந்தார். முன்னதாக, சோனியாவின் மாமியார் பொன்னம்மாவுக்கும் சோனியாவின் அத்தையின் கணவர் பவானி ஆகிய இருவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதைக்கண்ட சோனியா அவருடைய அத்தை முத்தழகியிடம் தெரிவித்துள்ளார். இதனை அறிந்த பவானியும் பொன்னம்மாவும் சோனியாவை பழிவாங்கும் எண்ணத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் இன்று சோனியாவிற்கு வளைகாப்பு நடைபெற இருந்த நிலையில், நேற்று இரவு மர்மமான முறையில் அவருடைய வீட்டில் தூக்கிலிட்டபடி  இறந்து கிடந்துள்ளார். இதனைத் தொடர்ந்து சந்தேகம் அடைந்த உறவினர்கள் அரூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

தகவலின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர் சடலத்தை மீட்டு அரூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டுவந்தனர். இறப்பில் மர்மம் உள்ளதாக சோனியாவின் தந்தை சிங்காரம் கொடுத்த புகாரின் பேரில் கொலையா? தற்கொலையா என அரூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.