கொடநாடு விவகாரத்தில் பழிவாங்கும் நோக்கம் இல்லை...

கொடநாடு விவகாரத்தில் பழிவாங்கும் நோக்கம் இல்லை என தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

கொடநாடு விவகாரத்தில் பழிவாங்கும் நோக்கம் இல்லை...

கொடநாடு விவகாரத்தில் பழிவாங்கும் நோக்கம் இல்லை என தமிழ் ளர்ச்சித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

சென்னை கலைவாணர் அரங்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, கொடநாடு விவகாரத்தில் முரண்பாடுகளின் மொத்த உருவமாக முன்னாள் அமைச்சர் பேசி இருப்பதாகக் கூறினார். சட்டப்பேரவையில் இது தொடர்பாக வாதிடக் கூடாது என்று ஜெயக்குமார் கூறுவதாகவும், ஆனால் பேரவையில் இது தொடர்பான வாதத்தை முதலில் முன்னெடுத்து அதிமுகதான் என்றும் தங்கம் தென்னரசு குறிப்பிட்டார்.

ஒரு தலைமைச் செயலகமே கொடநாட்டில் செயல்பட்டுள்ளதால், அங்கு நடைபெற்ற உண்மைகளை தெரிந்து கொள்ள வேண்டும் என அதிமுக தொண்டர்கள் எதிர்பார்ப்பதாகவும் தங்கம் தென்னரசு குறிப்பிட்டார்.