உக்ரைனில் இருக்கும் இந்தியர்களை மீட்க சொந்த விமானம் இல்லையா?

உக்ரைனில் இருக்கும் இந்தியர்களை மீட்க சொந்த விமானம் இல்லையா?

உக்ரைனில் இருக்கும் இந்திய மக்களை காப்பாற்ற சொந்த விமானம் இல்லை என்பதில் இருந்து பாஜக ஆட்சி செய்ய தகுதியில்லை என்பது தெளிவாகி உள்ளது என தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார்.

வரும் 28ஆம் தேதி ராகுல்காந்தி தமிழகம் வர உள்ளதையொட்டி சென்னை சத்யமூர்த்தி பவனில்  ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பேசிய கே.எஸ்.அழகிரி, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக தோல்வி என்பது ஏற்கனவே எழுதி வைக்கப்பட்ட ஒன்று என்றும், இந்திய மக்களை காப்பாற்ற சொந்த விமானம் கூட இல்லை என்பதால் பாஜக ஆட்சி செய்ய தகுதியில்லை என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.