தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு மழை இல்லை..!

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்..!

தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு மழை இல்லை..!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழகத்தின் உள் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்றும், சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால், அப்பகுதிகளுக்கு மீனவர்கள் பாதுகாப்புடன் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.