மீன்மார்க்கெட்டில் குவிந்த அசைவ பிரியர்கள்.. காசிமேடு, சிந்தாதிரிப்பேட்டையில் அலை மோதும் மக்கள் கூட்டம்!!

விடுமுறை தினமான இன்று சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன்களை வாங்க மக்கள் கூட்டம் அலை மோதியது.

மீன்மார்க்கெட்டில் குவிந்த அசைவ பிரியர்கள்.. காசிமேடு, சிந்தாதிரிப்பேட்டையில் அலை மோதும் மக்கள் கூட்டம்!!

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று கட்டுக்குள் கொண்டு வந்து நிலையில், பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதனை தொடர்ந்து, காசிமேடு மீன் மார்க்கெட் வழக்கம்போல், மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிய தொடங்கியுள்ளது. விடுமுறை தினமான இன்று, அதிகாலை முதலே மீன்களை வாங்க ஏராளமான அசைய பிரியர்கள், காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் குவிந்துள்ளனர். 0
 
இதேபோன்று, சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்க்கெட்டில் குவிந்த பொதுமக்கள் வஞ்சிரம், வவ்வால், ஷீலா போன்ற பல்வேறு வகையான மீன்களை ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். அனைத்து மீன் வகைகளின் விலையும் 50 முதல் 100 ரூபாய் வரை அதிகரித்துள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.