போதும் இனி இடமில்ல: குடும்ப சொத்த விற்கவிடாமல் தடுக்கும் தம்பியின் அட்ராசிட்டி

போதும் இனி இடமில்ல: குடும்ப சொத்த விற்கவிடாமல் தடுக்கும் தம்பியின் அட்ராசிட்டி

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் குடும்ப சொத்தை விற்க விடாமல் தம்பி கொடுக்கும் டார்ச்சரை அவரது அண்ணன் மட்டுமல்ல ஒரு ஊரே செய்வதறியாது திகைத்துள்ளது. 


தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள மீரான்குளம் கிராமத்திற்குள் நுழைந்தால் ஊர் முழுவதும் இது அண்ணன்- தம்பி வில்லங்க சொத்து இதனை யாரும் வாங்காதீர்கள் என ஒரு இடம் விடாமல் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. மீரான்குளத்தை சேர்ந்த தவமணியின் மகன்களான பொன்னையா- சௌந்தரராஜனுக்கு இடையில் பூர்வீக சொத்து தொடர்பாக தகராறு இருந்து வருவதாக கூறப்படுகின்றது.

எனவே தனக்கு தெரியாமல் அண்ணன் சொத்தை விற்றுவிடக்கூடாது என குடிநீர் தொட்டி, பொதுக்கழிப்பிடம், குட்டிச்சுவர் , கட்டை சுவர் என ஒரு இடத்தையும் விடாமல், இது அண்ணன்- தம்பி வில்லங்க சொத்து இதனை யாரும் வாங்காதீர்கள் என போஸ்டர் ஒட்டி அதகளப்படுத்தியுள்ளார். மேலும் விதவிதமான சினிமா வசனங்களுடன் ஆங்காங்கே போஸ்டரை ஒட்டியுள்ளதால் பொதுமக்களும் அதனை வேடிக்கையாக பார்த்துசெல்கின்றனர்.

இதை பார்த்து நொந்துபோன அண்ணன் பொன்னையா தம்பியின் அட்ராசிட்டியை சமாளிக்க முடியாமல் திணறிவருகிறார்.