மோச்சா புயல் : 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்...!

மோச்சா புயல் :  9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்...!

காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. 

தென் கிழக்கு வங்கக் கடலில் இன்று உருவாக உள்ள மோச்சா புயல், 5 கிலோ மீட்டர் வேகத்தில் வடமேற்கு நோக்கி நகர்ந்து, இன்று மாலை 5 மணி அளவில் புயலாக தீவிரமடைய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இதையும் படிக்க : பஞ்சாப் உள்ளிட்ட 4 மாநிலங்களில் இன்று இடைத்தேர்தல்...விறுவிறு வாக்குப்பதிவு!

இந்நிலையில், தற்போது இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரமடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதால், சென்னை, கடலூர், நாகை, காட்டுப்பள்ளி, தூத்துக்குடி, பாம்பன், எண்ணூர், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

மேலும், மீனவர்கள் தங்கள் படகுகளை கரைகளில் பத்திரமாக நிறுத்தி வைக்கும்படி மீன்வளத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டதோடு, கடற்கரை பகுதிகளில் போலீசாரின் பாதுகாப்பு பணி அதிகரிக்கப்பட்டுள்ளது.