ஆம்புலன்ஸில் பெண்ணுக்கு பிரசவம்... மருத்துவ உதவியாளருக்கு குவியும் பாராட்டு!!

ஆம்புலன்ஸில் பெண்ணுக்கு பிரசவம்... மருத்துவ உதவியாளருக்கு குவியும் பாராட்டு!!

ஈரோடு மாவட்டம் கோபிசட்டிபாளையத்தில் ஆம்புலன்ஸில் பெண்ணுக்கு பிரசவம் பார்த்த மருத்துவ உதவியாளர், பாராட்டுகளை பெற்று வருகிறார்.

கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள நம்பியூர் பகுதியை சேர்ந்தவர்  மணிகண்டன், இவருடைய மனைவி நித்யா. இவர் ஒன்பதுமாத கர்ப்பிணியாக உள்ளார். இந்த நிலையில் நித்யாவிற்க்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது, அதை அறிந்த அவரது உறவினர் உடனடியாக 108  ஆம்புலன்ஸ் க்கு தகவல் கொடுத்தனர். 

தகவலறிந்த 108 ஆம்புலன்ஸ் உடனடியாக விரைந்து சென்று பிரசவ வலியால் துடித்துக்கொண்டிருந்த நித்யாவை மீட்ட மருத்துவ நுட்புநர் கௌரிநாத் பரிசோதித்த பின்னர் உடனடியாக கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

108 ஆம்புலன்ஸ் கொன்னமடை பஸ் ஸ்டாப் அருகே வந்தபோது நித்யாவிற்க்கு பிரசவ வலி அதிகரிக்கவே, நிலைமையை புரிந்துகொண்ட 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் நந்தகுமார் வாகனத்தை ஓரமாக நிறுத்தியுள்ளார். பின்னர் மருத்துவ நுட்புநர் கௌரிநாத், நித்தியாவிற்கு பிரசவம் பார்த்துள்ளார். அப்போது நித்தியாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. 

பின்னர், தாயும்-சேயும் பத்திரமாக  கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக  அனுமதிக்கப்பட்டனர்.

தக்க நேரத்தில் துரிதமாக செயல்பட்டு பெண்ணுக்கு பிரசவம் பார்த்த 108 ஆம்புலன்ஸ் மருத்துவ நுட்புநர் கௌரிநாத் மற்றும் வாகன ஓட்டுனர் நந்தகுமார் ஆகியோர் பல தரப்பிலும் பாராட்ட்டுக்களை பெற்று வருகின்றனர்.

இதையும் படிக்க || மணிப்பூரை விடுங்கள்...திமுகவில் எங்களுக்கு என்ன பாதுகாப்பு? திமுக உட்கட்சி பூசல்!