கர்ப்பிணிகளுக்கான ஊட்டச்சத்து பொருட்கள் ஆவினில் கிடைக்காது.. அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு அமைச்சர் மா.சு விளக்கம்

கர்ப்பிணிகளுக்கான ஊட்டச்சத்து பொருட்கள் ஆவினில் கிடைக்காது.. அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு அமைச்சர் மா.சு விளக்கம்

கர்ப்பிணிகளுக்கு வழங்க கூடிய ஊட்டச்சத்து பொருட்கள் ஆவினில் கிடைக்க கூடியதல்ல என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.

கர்ப்பிணிகளுக்கான ஊட்டச்சத்து தொகுப்பில்  முறைகேடு நடைபெற்றுள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று குற்றம் சாட்டியிருந்தார்.

இந்தநிலையில் சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது, இதற்கு விளக்கம் அளித்துள்ள அமைச்சர் மா. சுப்பிரமணியன், பொருளாதார ரீதியாக குறைந்த விலையில் பொருட்களை யார் வழங்குகிறார்களோ அவர்களுக்கு தான்  டெண்டர் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து பெட்டக திட்டத்தில் முறைகேடு என்பது ஆதாரமற்றது எனவும் தெளிவுப்படுத்தியுள்ளார்.