வருவாய்த்துறையை எதிர்த்து, சாலையில் இறங்கி போராடிய முதியவர்கள்!

வருவாய்த்துறையை எதிர்த்து, சாலையில் இறங்கி போராடிய முதியவர்கள்!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் புத்தேரி அருகே மேல கலுங்கடி பகுதியில் புத்தேரி குளத்தை ஒட்டி 40க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. விவசாய பணிகள், மற்றும் பல்வேறு கூலி பணிகளில் அங்குள்ள மக்கள் ஈடுபட்டுள்ள வருகின்றனர், 60 ஆண்டுகளாக அப்பகுதியில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் வருவாய்த் துறையினரின் ஆலோசனையின் பேரில் பொதுப்பணி துறையினர் புத்தேரி குளத்தை ஒட்டிய இருக்கும் வீடுகளை அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதற்கான பணிகள் இன்னும் ஓரிரு நாட்களில் துவங்க உள்ள நிலையில், இப்போது ஏழை மற்றும் கூலி தொழிலாளர்கள் " தங்கள் வீடுகளை பொதுப்பணித்துறையினர் அகற்றுவதில் எந்த ஆட்சேபனையும் இல்லை, அதே நேரம் தங்களுக்கு மாற்று இடம் ஒதுக்கினால் மட்டும் போதும் அதில் தாங்கள் வீடுகளை கட்டிக் கொள்வதாகவும் கூறிய பொதுமக்கள் இன்று அதிகாரிகளின் கவனத்தை ஈர்த்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.