முதியவரை முட்டி தூக்கி வீசிய மாடு... நலம் விசாரித்த மேயர் ராதாகிருஷ்ணன்!

திருவல்லிக்கேணியில் சாலையில் சென்ற முதியவரை மாடு முட்டித் தூக்கிய சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் அருகே மாதா தெருவில் சாலையில், முதியவர் ஒருவர் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்க நின்று கொண்டிருந்த மாடு ஒன்று, அவரை முட்டித் தூக்கி சாலையில் வீசியது.

மாடு முட்டி தூக்கி வீசப்பட்டதால் படுகாயமடைந்த அந்த முதியவரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.  

காயமடைந்த முதியவர் யார் என்பது குறித்தும், மாட்டின் உரிமையாளர் யார்? என்பது குறித்து ஐஸ் ஹவுச் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காயமடைந்த முதியவரை சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். 

கடந்த 35 நாள்களில் இதே பகுதியில், இது இரண்டாவது சம்பவம் என்பது குறிப்பிடத் தக்கது.