ஓமலூர் : கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 7 பேர் கைது...!

ஓமலூர் அருகே மோட்டார் சைக்கிளை திருடி, கஞ்சா விற்பனை செய்த ஏழு பேரை அடுத்தடுத்து கருப்பூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஓமலூர் : கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 7 பேர் கைது...!

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள கருப்பூர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யபடுவதாக தொடர்ந்து புகார்கள் வந்தன. இதனை தொடர்ந்து கஞ்சா வியாபாரிகளை கைது செய்ய போலீசார், தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வந்தனர். இதனிடையே கருப்பூர் போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், வெள்ளக்கல்பட்டி டால்மியா போர்டு பகுதிக்கு சென்றனர். அங்கு இளைஞர் ஒருவர் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தார். அவரை பிடித்து விசாரித்தபோது, அவர் கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் ஹள்ளி கிராமத்தை சேர்ந்த சதீஷ்குமார் என்பது தெரியவந்தது. 

பின்னர், அவரிடம் இருந்து ஒன்றரை கிலோ கஞ்சாவும், திருட்டு மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், அவர் கொடுத்த தகவலின் பேரில் அவரது கூட்டாளிகளான விஷ்வா என்கிற விஸ்வநாதன், ரமேஷ், ஆகியோரை கைது செய்து, அவர்களிடமிருந்து 250 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இவர்களிடம் நடத்திய விசாரணையை தொடர்ந்து சச்சின் ராக், கண்ணன், கனகராஜ், பிரவீன் ஆகியோரையும் கைது செய்தனர். இவர்களிடமிருந்து பதிவு எண் இல்லாத மோட்டார் சைக்கிள் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் கூட்டாக கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இவர்களை அனைவரையும் கைது செய்த கருப்பூர் போலீசார் சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.