பொங்கல் தொகுப்பு விவகாரத்தில் - அமைச்சர் பதில்

போற்றுவோர் போற்றட்டும்; புழுதி வாரி தூற்றுவோர் தூற்றட்டும். பொங்கல் தொகுப்பு விவகாரத்தில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பதில்

பொங்கல் தொகுப்பு விவகாரத்தில் - அமைச்சர் பதில்

சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்.

பொங்கல் தொகுப்பு விவகாரத்தில் அதிமுக குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு:

போற்றுவோர் போற்றட்டும்; புழுதி வாரி தூற்றுவோர் தூற்றட்டும் இன்னைக்கு இருக்கிற நிதி ஆதாரத்தில் என்ன செய்ய முடியுமோ அதை செய்வோம், கரும்பு என்பது போராட்டத்திற்காக அல்ல மக்களின் வேண்டுகோளுக்கேற்ப கொடுக்கிறோம்,
எதிர்கட்சியை பற்றியோ  எடப்பாடியை பற்றி எங்களுக்கு கவலை இல்லை.

பொங்கல் தொகுப்பு குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு:

அதுபோன்ற பிரச்சினைகள் எதுவும் இல்லை பொங்கல் தொகுப்பு 2 கோடியே 19 லட்சம் கார்டுகளுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்படும். வேஷ்டி, சேலைகள் வழங்கப்படும் என்று அமைச்சர் சொல்லியுள்ளார். எந்தவிதமான குற்றச்சாட்டுகள் இல்லாமல் இந்த ஆண்டு ரொக்கம் ஆயிரம், சர்க்கரை வெள்ளம், முழு கரும்பு கொடுத்து, கரும்புக்கு விலையும் நிர்ணயித்து முறைப்படி நடக்கிறது.

அமைச்சரவை மாற்றங்கள் குறித்த கேள்விக்கு:

அமைச்சர்கள் இலாக்க மாற்றம் என்பது முதல்வரின் விருப்பம் என பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் கூறினார்.