"ஒரே நாடு, ஒரே தேர்தல்" அதிமுக ஆதரவு!
ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு அதிமுக ஆதரவு அளிக்கிறது என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் வாக்குறுதியான ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை கொண்டுவருவதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு தயார் செய்துக்கொண்டிருக்கிறது. இதற்காக செப்டம்பர் 18 ஆம் தேதி சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடர் கூட்டப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு இந்தியாக கூட்டணிக் கட்சிகள் எதிர்ப்பு தெரவித்து வருகின்றன.
இந்நிலையில் ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு அதிமுக ஆதரவளிக்கும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், "ஒரே நாடு, ஒரே தேர்தல் நடைமுறை கூட்டாட்சி அமைப்பை வலுப்படுத்தும் என கூறியுளார். ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைக்கு வந்தால் ஜனரஞ்சக திட்டங்களை விட வளர்ச்சியே முக்கியமாக இருக்கும் என குறிப்பிட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமி, மக்களவை, மாநில சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
AIADMK supports One Nation One Election policy ,
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) September 1, 2023
AIADMK strongly advocates Elections for the Lok Sabha and state assemblies be held simultaneously
As it will escalate the speed of our country’s development and avoid political instability.
Simultaneous elections will save the…
இதையும் படிக்க:"பாடல்களை கேட்டுக் கொண்டு இருந்தால் சுகப்பிரசவமாகும்" மகப்பேறு மருத்துவர் தமிழிசை கருத்து!