பணம் உள்ளவர்களுக்கு மட்டும் தான் பாஜகவில் பொறுப்பு வழங்கப்படுகிறது...!!  பொருளாதார பிரிவு மாநில செயலாளர் ராஜினாமா...!! 

பணம் உள்ளவர்களுக்கு மட்டும் தான் பாஜகவில் பொறுப்பு வழங்கப்படுகிறது...!!  பொருளாதார பிரிவு மாநில செயலாளர் ராஜினாமா...!! 

ஆருத்ரா விவகாரத்தை சுட்டிக்காட்டி பாஜகவிலிருந்து பொருளாதார பிரிவு மாநில செயலாளர் எம்.ஆர்.கிருஷ்ணபிரபு தனது பதவியை ராஜினமா செய்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சியின் அடிப்படை உறுப்பினராக இருக்க கூட தகுதி இல்லாத சிலரை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையும் கேசவ விநாயகமும் பொறுப்பில் அமர்த்தி அழகு பார்ப்பதாக கூறியுள்ளார். மேலும். ஆருத்ரா போன்ற மோசடியில் ஈடுபட்ட நபர்கள் மாநில தலைமைக்கு மிக நெருக்கமாக இருந்து வருவதாகவும், பாஜக தலைமை இதை கண்டும் காணாமல் இருப்பதை தனது மனம் ஒப்புக்கொள்ளவில்லை எனவும் வேதனை தெரிவித்துள்ளார். 

தொடர்ந்து, பணம் உள்ளவர்களுக்கு மட்டும் தான் பாஜகவில் பொறுப்பு வழங்கப்படுகிறது என்று குற்றம் சாட்டிய அவர், பாஜகவில் இதற்குமேல் தான் இருந்தால் தனது உயிருக்கு பாதிப்பு வரக்கூடும் எனவும் கிருஷ்ண பிரபு தெரிவித்துள்ளார்.