ஆரம்ப சுகாதார நிலையம் இடம் மாற்றத்திற்கு எதிர்ப்பு...! ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம்...!

வல்லத்தில் இயங்கி வரும் ஆரம்ப சுகாதார நிலையம் இடம் மாற்றம் செய்வதை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்.

ஆரம்ப சுகாதார நிலையம் இடம் மாற்றத்திற்கு எதிர்ப்பு...! ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம்...!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள வல்லம் கிராமத்தில் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தற்போது வேறு இடத்திற்கு மாற்றம் செய்வதற்கு மாவட்ட சுகாதாரப் பணிகள் துறை நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்த தகவலை அறிந்த வல்லம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தை மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மேலும் இன்று தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் கிராம மக்களுடன், தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆரம்ப சுகாதார நிலைய இடமாற்றத்தை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இதனைத் தொடர்ந்து ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று கோரிக்கை மனுவை வழங்கினர். இச்சம்பவத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.