தமிழகத்தில் 4நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!!..

தமிழகத்தில் இந்த மாதத்தில் 4நாட்கள் டாஸ்மாக கடைகள் அடைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் 4நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!!..

இது குறித்து டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர், அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்,ஜனவரி 15-ந்தேதி திருவள்ளுவர் தினம், 18-ந்தேதி வடலூர் ராமலிங்க வள்ளலார் நினைவு தினம், 26-ந்தேதி குடியரசு தினம் என்பதால், மேற்கண்ட நாட்கள் மதுபானம் விற்பனையில்லா தினங்களாக அனுசரிக்கப்பட இருக்கிறது.

இதனால் குறிப்பிட்டுள்ள நாட்களில் அனைத்து மதுக்கடைகள் மற்றும் அதனுடன் இணைந்து செயல்படும் அரசு உரிமம் பெற்ற பார்களை கடை மேற்பார்வையாளர்கள் பூட்டி சீல் வைக்க வேண்டும் அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழகத்தில் வருகிற 9-ந்தேதி  முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. எனவே அப்போது ‘டாஸ்மாக்’ மதுக்கடைகள் அடைக்கப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இதனை அனைத்தும் சேர்த்து இந்த மாதத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் மதுக்கடைகள் அடைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.