எங்களது பரம்பரை காங்கிரஸ் கட்சிக்காக உழைத்தது - குமரி அனந்தன்!
தங்களது குடும்பம் பரம்பரை பரம்பரையாக காங்கிரஸ் கட்சிக்காக உழைத்துள்ளதாக குமரி அனந்தன் தெரிவித்துள்ளார்.
மலர் தூவி மரியாதை:
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வசந்தகுமாரின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப்படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது. இதில் வசந்தகுமாரின் சகோதரரும், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவருமான குமரி அனந்தன் பங்கேற்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதையும் படிக்க: https://malaimurasu. com/posts/cover-story/Arumugasamy-Commission-report-submission
காங்கிரஸ் கட்சிக்கு உழைப்பு:
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய குமரி அனந்தன், தன்னுடைய தந்தை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் என்றும், தந்தையைப் பின்பற்றி தன்னுடைய எட்டு சகோதரர்களும் காங்கிரஸ் கட்சிக்கு உழைத்துள்ளதாகவும் தெரிவித்தார். அதன்படி, வசந்த குமாரைத் தொடர்ந்து அவருடைய மகன் விஜய் வசந்த் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதாகக் குறிப்பிட்ட குமரி அனந்தன், தானும் காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்ததைக் குறிப்பிட்டார்.
பிறகு, வசந்தகுமார் உழைப்பு காங்கிரஸ் கட்சிக்கு இருந்தது போல அவரது பரம்பரையின் உழைப்பும் காங்கிரஸ் கட்சிக்கு இருக்கும் என்றும் கூறினார்.