10.5% இடஒதுக்கீடு: முதலமைச்சருக்கு தபால் மூலம் கடிதம் அனுப்பிய அன்புமணி!

10.5% இடஒதுக்கீடு: முதலமைச்சருக்கு தபால் மூலம் கடிதம் அனுப்பிய அன்புமணி!

வன்னியர் சமுதாயத்திற்கான 10 புள்ளி 5 விழுக்காடு இடஒதுக்கீட்டை வழங்க கோரி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் முதலமைச்சருக்கு தபால் மூலம் கடிதம் அனுப்பியுள்ளார்.

கடந்த அதிமுக ஆட்சியில் வன்னியர் சமுதாயத்திற்கு 10 புள்ளி 5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்குவது குறித்து சிறப்பு சட்டம் கொண்டுவரப்பட்டது. அதனை தொடர்ந்து ஆட்சிக்கு வந்த திமுக அரசு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் நீதியரசர் பாரதிதாசன் தலைமையில் ஆணையம் அமைத்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. 

இதையும் படிக்க : அண்ணாமலை சொன்னால்...நான் அதற்கு பதில் அளிப்பேன் - ஓபிஎஸ்!

இந்நிலையில் அந்த இட ஒதுக்கீட்டை உடனடியாக வழங்கக்கோரி, அன்புமணி ராமதாஸ், முதலமைச்சருக்கும், ஆணைய தலைவர் பாரதிதாசனுக்கும் தபால் மூலம் கடிதம் அனுப்பி கோரிக்கை விடுத்துள்ளார்.