திமுகவின் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாக பழனிசாமி சாடல்.!!

திமுகவின் கடந்த எட்டு மாதகால ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

திமுகவின் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாக பழனிசாமி சாடல்.!!

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த எட்டு மாதகால திமுக ஆட்சியில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாகவும், அதனை கண்டு மக்கள் கொதிப்பில் உள்ளனர் எனவும் கூறியுள்ளார்.

குற்றச்செயலில் ஈடுபடுபவர்களும், சமூக விரோதிகளும், பொதுவெளியில் காவல்துறையினரிடம் மரியாதை குறைவாக நடப்பது மிகவும் அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இரவு, பகல் பாராமல் பணியாற்றுவது தான் காவல்துறையினரின் மன அழுத்ததிற்கு காரணம் என்றும், அதனால்தான் சில அத்துமீறல்கள் நடைபெறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சட்டத்தின் ஆட்சியை நிலை நிறுத்துங்கள் என்றும், தவறு செய்யும் காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.