மக்களே உஷார்.. 13 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு.. மீனவர்களுக்கு எச்சரிக்கை!!

தமிழகத்தில் நாமக்கல், சேலம், நீலகிரி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

மக்களே உஷார்.. 13 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு.. மீனவர்களுக்கு எச்சரிக்கை!!

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல  கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, இன்று தருமபுரி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நாளை மற்றும் அதன் மறுநாள் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில்  மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரம் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
 
இலட்சத்தீவு  பகுதி, தென்கிழக்கு அரபிக்கடல், கேரளா கடலோரப்பகுதிகள்  வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.