உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வர வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு...அமைச்சர் செந்தில்பாலாஜி...!!

உதயநிதி அமைச்சராக வர வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள், எங்களது விருப்பமும் அதுவே என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வர வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு...அமைச்சர் செந்தில்பாலாஜி...!!

கரூரில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி கூறுகையில், 

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் எடுத்துக்காட்டாக செயல்படுகிறார். நடந்து முடிந்த தேர்தல்களில் 234 தொகுதிகளிலும் பயணித்து மக்களின் அன்பையும் பாசத்தையும் பெற்றவர். அவர் அமைச்சராக வர வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள், எங்களது விருப்பமும் அதுவாகவே உள்ளது என்றார்.    

திமுக சார்பில் தேர்தல் சமயத்தில் அளிக்கப்பட்ட 502 வாக்குறுதிகளில் ஆட்சி பொறுப்பேற்ற ஆறு மாதங்களில் 202 வாக்குறுதிகளை முதல்வர் நிறைவேற்றியுள்ளார் என கூறிய அவர், தோல்வியின் காரணமாக, அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக அதிமுகவினர் பல்வேறு கருத்துக்களை பேசி வருகிறார்கள் என்றார்.

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுகவிற்கு 100 சதம் வெற்றியை மக்கள் தருவார்கள் என கூறிய அவர், இனி வரக்கூடிய காலங்களில் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளை ஒருமையில் பேசக்கூடிய முன்னாள் அமைச்சர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.