பிறந்தது 2023 - புத்தாண்டை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் மக்கள்... கோயில்களில் திரண்டு பக்தர்கள் சுவாமி தரிசனம்..!

புத்தாண்டு பண்டிகையான இன்று தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் மக்கள் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டு சுவாமி தரிசனம் மேற்கொண்டனர்.

பிறந்தது 2023 - புத்தாண்டை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் மக்கள்...  கோயில்களில் திரண்டு பக்தர்கள் சுவாமி தரிசனம்..!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள பண்பொழி திருமலை குமாரசுவாமி திருக்கோயிலில் புத்தாண்டு தினத்தை ஒட்டி ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அப்போது முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயிலில் ஆங்கில புத்தாண்டை ஒட்டி உற்சவர் சண்முகநாதர் வள்ளி தேவயானி சமேதராய் சிறப்பு புஷ்பம் மற்றும் தங்க ஆபரணத்தில் எழுந்தருளினார். இதில், திரளான பக்தர்கள் குவிந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

இதேப்போல், தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே புடலங்காய் சித்தர் அதிஷ்டானம் அமைந்துள்ளது. அங்கு உலக நன்மை வேண்டி சர்வாபீஷ்ட சித்தி மகாயாகம் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.