சந்தன கட்டைகளை மாருதியில் கடத்த முயன்ற நபர்கள்!.. வளைத்து பிடித்த போலீசார் அதிரடி

பொள்ளாச்சி அருகே வனப்பகுதியில் சந்தன மரங்களை வெட்டி கடத்த முயன்ற ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். 

சந்தன கட்டைகளை மாருதியில் கடத்த முயன்ற நபர்கள்!.. வளைத்து பிடித்த போலீசார் அதிரடி

கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட காப்புக் காடு பகுதியில் சந்தன மரங்கள் வெட்டப்படுவதாக வனத்துறையினருக்கு ரகசிய புகார் வந்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர், மாருதி கார் ஒன்றில், மூன்று பேர் சந்தன மரக்கட்டைகளை ஏற்றிக் கொண்டிருந்ததை கண்டனர்.

உடனடியாக அவர்களை சுற்றி வளைத்து பிடித்த வனத்துறையினர், அவர்களிடம் இருந்து சுமார் ஒரு லட்சம் மதிப்பிலான 73 கிலோ எடை கொண்ட 39 சந்தன கட்டைகள் மற்றும் மாருதி காரை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து கடத்தல் முயற்சியில் ஈடுபட்ட 5 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட முக்கிய குற்றவாளியான, கேரள மாநிலம் கொழிஞ்சாம்பாறையை சேர்ந்த அப்துல் சலீம் என்பவரை கைது செய்ய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.