7வது நாள் முடக்கம் : "மக்கள் பிரச்னை குறித்து பேச முடியாத நிலை ஏற்படும்" - தமிழிசை

7வது நாள் முடக்கம் : "மக்கள் பிரச்னை குறித்து பேச முடியாத நிலை ஏற்படும்" - தமிழிசை

நாடாளுமன்றம் தொடர்ந்து முடக்கப்படுவதால் மக்கள் பிரச்சனை குறித்து பேசமுடியாத நிலை ஏற்படும் என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.


சென்னையை அடுத்த அயப்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற 12வது மாணவர் தலைமை ஏற்பு விழா 2023 நிகழ்ச்சியில் தெலுங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான  தமிழிசை சவுந்திரராஜன் கலந்துகொண்டு மாணவ - மாணவிகளுக்கு பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கினார்.

இதையும் படிக்க : வித்தியாசமான கெட்டப்பில் மிரட்டும் அட்டகத்தி தினேஷ் !!

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த   தமிழிசை சௌந்தரராஜன், நாடாளுமன்றம் தொடர்ந்து 7 வது நாளாக முடங்கியது குறித்து பேசினார். நாடாளுமன்றம் என்பது விவாதங்களுக்குடையது, அதை தொடர்ந்து முடக்குவதால் மக்கள் பிரச்சினை குறித்து பேச முடியாத நிலை ஏற்படும் என்று தமிழிசை தெரிவித்துள்ளார்.