மழை வெள்ளத்தில் சிக்கிய நபர்...: கிராம மக்கள் ஒன்றுகூடி மீட்பு..!

கூடலூர் பகுதியில் இடைவிடாமல் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஆறுகளில் நீர் பெருக்கெடுத்து ஓடுகின்றன. இந்நிலையில் மங்குலி பகுதியில் மரப்பாலம் ஒன்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. அதில் சிக்கிய ஒருவரை பொதுமக்கள் சேர்ந்து ஒன்றுகூடி கயிறு கட்டி மீட்டனர்.

மழை வெள்ளத்தில் சிக்கிய நபர்...: கிராம மக்கள் ஒன்றுகூடி மீட்பு..!

கூடலூரில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருவதால், பல இடங்களில் வெள்ளம், மண்சரிவு போன்றவை ஏற்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த மங்குலி பகுதியில் மாணிக்கம் என்பவர் மரப்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது பாலம் ஆனது வெள்ளத்தால் இடிந்து விழுந்துள்ளது. அதில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கில், மாணிக்கம் சிக்கி தவித்துள்ளார். இதனை கண்ட கிராம மக்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் விரைந்து செயல்பட்டு கயிறு கட்டி இழுத்து அவரை காப்பாற்றியுள்ளனர்.    

இதுவரை எந்த அதிகாரிகளும் வந்து இதுகுறித்து கேட்கவில்லை எனவும் உடம்பில் காயங்கள் ஏற்பட்டு இருக்கும் தன்னை யாரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லவில்லை எனவும் மாணிக்கம் தெரிவித்துள்ளார்.  இதனால் கூடலூர் பகுதிகளில் பரபரப்பு நிலவியது. மேலும் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களில் இருக்க மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.