அதிமுக வேட்பாளர்கள் வேட்புமனு திட்டமிட்டு நிராகரிப்பு... மாநில தேர்தல் ஆணையத்தில் புகார்

அதிமுக வேட்பாளர்கள் வேட்புமனு திட்டமிட்டு நிராகரிப்பு... மாநில தேர்தல் ஆணையத்தில் புகார்

ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வேட்பாளர்களின் வேட்பு மனு திட்டமிட்டு நிராகரிக்கப்பட்டதாக மாநில தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்கள் திரும்ப பெறுவதற்கான நேரம் முடிவடைந்த நிலையில்,  கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகத்துருக்கம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட நான்கு வார்டுகளில் அதிமுக வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது.

அதே போல் கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிசிவந்தியம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உடப்பட்ட ஒரு வார்டில் அதிமுக வேட்பாளர் மனு நிராகரிக்கப்பட்டுள்; ளது. இது தொர்பாக அதிமுக சார்பில் தமிழக தேர்தல் ஆணையரை சந்தித்து அதன் வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் பாபு முருகவேல் புகார் மனு அளித்தார்.

அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், நேர்மையான தேர்தல் நடைபெற நீதிமன்றத்தை அதிமுக நாடும் என தெரிவித்தார்.