நடை பாதையில் ஆக்கிரமிப்புகளை அகற்றிய போலீசார்...!

சென்னை வேளச்சேரி மற்றும் தரமணி பிரதான சாலை நடை பாதையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்ததை அகற்றும் பணியில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டனர்.  

சென்னை வேளச்சேரி விஜயநகர் பேருந்து நிலையம், வேளச்சேரி 100 அடி சாலை, தரமணி பிரதான சாலை ஆகிய பகுதியில் அடையாறு சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் பொன் திலக்குமார், போக்குவரத்து துணை ஆணையர் மகேஷ்குமார் ஆகியோர் அதிரடியாக நடைபாதையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த கடை விளம்பர பலகை, பெயர் பலகை, மரக்கழிவு, கட்டிட கழிவுகளை அகற்றினர்.

இதையும் படிக்க : ஆசிய விளையாட்டில் பதக்கத்தில் சதமடித்த இந்தியா...!

மேலும் சாலை ஓரத்தில் உள்ள கடைகளின் உரிமையாளர்கள் அவர்களின் வாகனங்கள், கடைகளுக்கு தேவையான பொருட்களை கொண்டும், நடைபாதையில் விற்பனை பொருட்களை வைத்தும் நடைபாதையை ஆக்கிரமித்து வந்திருந்ததை வேளச்சேரி போக்குவரத்து போலீசார் முற்றிலுமாக அகற்றினர். இந்த பணியில் சுமார் 50க்கும் மேற்பட்ட போக்குவரத்து மற்றும் சட்டம் ஒழுங்கு காவல்துறையினர் பங்கேற்றனர்.