காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் 10 கிலோ கஞ்சா பறிமுதல்- போலீசார் விசாரணை....

காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து மதுரைக்கு கொண்டு செல்லவிருந்த 10 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில்  10 கிலோ கஞ்சா பறிமுதல்- போலீசார் விசாரணை....

காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் சிவகாஞ்சி போலீசார் ரோந்து பணி மேற்க்கொண்டனர். அப்போது திருச்சிக்கு செல்லும் பேருந்துகள் நிற்கும் இடத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் பையுடன் நின்றிருந்த நபரை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர். விசாரணையில் அந்த நபர் போலீசாரின் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது.

இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அதில் 10 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது. அதனைதொடர்ந்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையில்,  மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தாலுக்கா, மேக்கிழார்பட்டி அருகே உள்ள கீரிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பெரியகருப்பன் என்பதும், ஆந்திராவிலிருந்து கஞ்சாவை வாங்கி வந்து மதுரைக்கு கொண்டுசெல்ல இருந்ததும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து ஓசப்பன் பெரியகருப்பனை சிவகாஞ்சி போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 10 கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து சிவகாஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து, கைது செய்யப்பட்ட நபரை காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.