போலீஸ் வேன், கார் நேருக்கு நேர் மோதல்... விபத்தில் பெண் ஒருவர் பலி...

ஆரணி அருகே போலீஸ் வேனும், காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட  விபத்தில், பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். 12 பேர் படுகாயம் அடைந்தனர். 

போலீஸ் வேன், கார் நேருக்கு நேர் மோதல்... விபத்தில் பெண் ஒருவர் பலி...

திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணிபுரியும் காவலர்கள் மற்றும் ஊழியர்களை வேலூரிலிருந்து ஏற்றிச் செல்வது வழக்கமாகும்.

அதேபோல் இன்று வேலூரில் இருந்து காவல்துறையினரின் வாகனத்தில் ஓட்டுநர் பெரியசாமி உட்பட காவல்துறையினர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களை ஏற்றிக் கொண்டு திருவண்ணாமலை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

அப்பொழுது செங்கத்திலிருந்து குடியாத்தத்தில் சென்று கொண்டிருந்த காரில் டிரைவர் உட்பட 2 ஆண்கள் மற்றும் ஒரு பெண்கள் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்பொழுது அழகுசேனை அருகே வேனும், காரும் நேருக்கு நேர் மோதியதில் காரில் பயணம் செய்த அந்தப் பெண் சம்பவ இடத்திலேயே பலியானார்.

மேலும் காரில் பயணம் செய்த மூன்று ஆண்களும் காவல்துறையினர்  வாகனத்தில் சென்ற சரஸ்வதி என்கின்ற காவல் ஆய்வாளர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணி புரியும் ஊழியர்கள் 8 நபர்கள் உட்பட 12 நபர்கள் படுகாயமடைந்தனர்.

படுகாயம் அடைந்தவர்களை வேலூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஏடிஎஸ்பி அசோக் குமார் சம்பவ இடத்தை பார்வையிட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார். இன்னும் காரில் வந்தவர்களின் விவரம் சரிவர தெரியாததால் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.