அரசு பேருந்தின் சக்கரத்தில் சிக்கி காவலர் உயிரிழப்பு- பதைபதைக்கும் சிசிடிவி காட்சி

மதுரையில் போக்குவரத்து புலனாய்வு தலைமை காவலர் அரசு பேருந்து சக்கரத்தில் சிக்கி பலியான சம்பவம் தொடர்பான பதைபதைப்பான காட்சிகள் வெளியாகியுள்ளன.

அரசு பேருந்தின் சக்கரத்தில் சிக்கி காவலர் உயிரிழப்பு- பதைபதைக்கும் சிசிடிவி காட்சி

மதுரை திருமங்கலம் கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் ராஜசேகரன் (42) இவர் போக்குவரத்து புலனாய்வுத்துறை தலைமை காவலராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் நேற்று மதியம் சின்ன உடைப்பு பகுதியில் நடந்த விபத்து குறித்து விசாரணை நடத்த டூவீலரில் சென்று கொண்டிருந்த போது மண்டலே நகரிலிருந்து மதுரை விமான நிலையம் செல்லும் சாலையில்  நிலைதடுமாறி சாலை தடுப்பில் மோதி கீழே விழுந்தார்.

அப்போது மண்டலே நகர் நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பேருந்தின் முன் சக்கரம் அவர் மீது ஏறியதில் பலத்த காயம் அடைந்தார். இந்த காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியது. அதனை தொடர்ந்து அங்கு பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டிருந்த காவல்துறையினர், அவரை மீட்டு  அவசர சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.