குளத்தை ஆய்வு செய்ய சென்ற பொள்ளாச்சி ஜெயராமன் மீது செருப்பு வீசப்பட்டதால் பரபரப்பு...

குளத்தை ஆய்வு செய்யச்சென்ற முன்னாள் துணை சபா நாயகரும், பொள்ளாச்சி தொகுதி எம்.எல்.ஏ.,வுமான பொள்ளாச்சி ஜெயராமன் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குளத்தை ஆய்வு செய்ய சென்ற பொள்ளாச்சி ஜெயராமன் மீது செருப்பு வீசப்பட்டதால் பரபரப்பு...

கோவை மாவட்ட கிணத்துக்கடவு அருகே உள்ள கோதவாடி குளத்தை பார்வையிட வந்த பொள்ளாச்சி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமன் இன்று காலை சென்றார்.இதனிடையே பொள்ளாச்சி ஜெயராமன் ஆய்வு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் முற்றுகையிட்டனர்.

இந்த சூழலில், கூட்டத்தில் இருந்த திமுக தொண்டர்களில் ஒருவர் பொள்ளாச்சி ஜெயராமன் மீது செருப்பை எடுத்து வீசினார்.இதனால் இருதரப்புக்கும் இடையே பதட்டமான சூழலில் நிலவியது. இந்த சூழலில், கூட்டத்தில் சிக்கியிருந்த பொள்ளாச்சி ஜெயராமனை அவரை பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.இரு கட்சியினர் இடையே ஏற்பட்ட மோதலை கண்டு பொதுமக்கள் நாலாபுறமும் சிதறி ஓட்டம் பிடித்த சம்பவம் பரபரபை ஏற்படுத்தியுள்ளது.