பொங்கல் சிறப்பு பேருந்து - போக்குவரத்துத்துறை அமைச்சர் நாளை ஆலோசனை!

பொங்கல் சிறப்பு பேருந்து - போக்குவரத்துத்துறை அமைச்சர் நாளை ஆலோசனை!

பொங்கல் பண்டிகையொட்டி சிறப்பு பேருந்துகளை இயக்குவது தொடர்பாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நாளை ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

பொங்கல் சிறப்பு பேருந்து இயக்கம்:

தைத்திருநாளாம் பொங்கல் திருநாளை தமிழர்கள் வெகுவிமரிசையாக கொண்டாடி வருகின்றனர். அந்நாளை கொண்டாடுவதற்காக வெளி ஊர்களில் தங்கி வேலை செய்பவர்கள் உள்பட பலரும் தங்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்து செல்வார்கள். 

இதையும் படிக்க: ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நிரந்தரம் கிடையாது...மாறாக இதை செய்வோம்... அமைச்சர் சொன்னது என்ன?

அந்த வகையில் வரும் 15 ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. எனவே, பொங்கல் பண்டிகையை ஒட்டி, சென்னை உள்ளிட்ட ஊர்களில் இருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு பொதுமக்கள் அனைவரும் படையெடுத்து செல்வர்.

நாளை ஆலோசனை கூட்டம் :

இதனால் பேருந்து பற்றாக்குறை ஏற்படும் என்பதால், பொதுமக்கள் எந்தவித இடையூறுகளின்றி பயணம் செய்வதற்காக சிறப்புப் பேருந்துகளை இயக்குவது குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் நாளை காலை போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.