முழுக்க முழுக்க மிமிக்கிரி செய்யப்பட்ட ஆடியோ...அடித்து செல்லும் பொன்னையன்!

முழுக்க முழுக்க மிமிக்கிரி செய்யப்பட்ட ஆடியோ...அடித்து செல்லும் பொன்னையன்!

அதிமுகவில் கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில், மிமிக்ரி செய்து ஆடியோ வெளியிடப்பட்டுள்ளதாக, அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் பொன்னையன் விளக்கம் அளித்துள்ளார்.

முன்னாள் அமைச்சரும், கழக அமைப்பு செயலாளருமான பொன்னையன் பேசியதாக வெளியான சர்ச்சை ஆடியோ:

அதிமுகவில் பொதுச் செயலாளர் பதவியை கைப்பற்ற எடப்பாடி பழனிச்சாமி பணம் கொடுத்ததாக முன்னாள் அமைச்சரும், கழக அமைப்பு செயலாளருமான பொன்னையன் பேசியதாக ஆடியோ ஒன்று இணையத்தில் வைரலானது. அதில், எடப்பாடி பழனிசாமி, சிவி சண்முகம், எஸ்பி வேலுமணி, தங்கமணி ஆகியோருக்கு எதிராக பொன்னையன் பேசுவதாக பதிவாகி உள்ளது. மேலும், கொள்ளை அடித்ததை காப்பாற்றிக்கொள்ள ஆளும் கட்சியை நம்பி உள்ளதால், திமுகவை இவர்கள் திட்டுவதில்லை என்றும் அந்த ஆடியோவில் பொன்னையன் குறிப்பிட்டுள்ளார்.  

மிமிக்கிரி செய்து ஆடியோ வெளியிட்டுள்ளதாக கூறிய பொன்னையன்:

இந்த ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த பொன்னையன், தான் பேசியதாக வெளியாகியுள்ள ஆடியோ, முழுக்க முழுக்க தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, மிமிக்கிரி செய்து வெளியிடப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், ஈபிஎஸ் தலைமையிலான கட்சியை கலங்கப்படுத்துவதற்காகவே, இதுபோன்ற செயல்களில் ஓபிஎஸ் தரப்பினர் ஈடுபடுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.