3 சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பாதிரியார் போக்சோ சட்டத்தில் கைது

3 சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பாதிரியார் போக்சோ சட்டத்தில் கைது

மண்டபம் பகுதியில் உள்ள பங்குத்தந்தை மூன்று சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக போக்சோ சட்டத்தில் கைது. 

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம், கோயில் வாடி  பகுதியில் பங்குத்தந்தையாக பணியாற்றி வருபவர் ஜான் ராபர்ட், (46)இவர்  சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் பகுதியைச் சேர்ந்தவர், 
 
இந்நிலையில் தங்கச்சி மடம் பள்ளியில் பயின்று வரும் சுமார் 15, 16, 17  வயதுடைய மூன்று இளம் சிறுமிகளை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது, இதனைத் தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்ட சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் ஆனந்தராஜ் சிறுமிகளிடம் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டதன் அடிப்படையில் சிறுமிகளிடம் பங்கு தந்தை சஅத்துமீறியது தொடர்பான சம்பவங்கள் குறித்து காவல்துறையில் புகார் அளித்தார்.  

இதையடுத்து இச்சம்பவம் தொடர்பாக மண்டபம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை உத்தரவின்பேரில் பங்குத்தந்தை ஜான் ராபர்ட் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து அவரை கைது செய்து  சிறையில் அடைத்தனர், 

இதனால் மண்டபம், தங்கச்சிமடம் ராமேஸ்வரம் ஆகிய பகுதிகளில் பெரும் பரபரப்பும் பதட்டமும் ஏற்பட்டுள்ளது,  மூன்று சிறுமிகளையும் காவல்துறையினர் தனித் தனியாக தீவிரமாக விசாரித்து வருகின்றனர்- இது போன்ற பாலியல் சீண்டல்கள்  எத்தனை ஆண்டுகளாக நடைபெற்றது, இதில் மேலும் பல சிறுமிகள் பாதிக்கப்பட்டு உள்ளார்களா என்பது குறித்தும்  விசாரிக்கப்பட்டு வருகிறது.