விடுமுறை முடிந்து துவங்கிய தொடக்கப்பள்ளிகள்...!

விடுமுறை முடிந்து துவங்கிய தொடக்கப்பள்ளிகள்...!

1 முதல் 5 ஆம் வகுப்பு வரை உள்ள அரசுப் பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் துவங்கியது.

தமிழ்நாட்டில் செயல்படும் அனைத்து வகை அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் இரண்டாம் பருவம் மற்றும் அரையாண்டுத் தேர்வு முடிந்து 24.12.2022 முதல் 01.01.2023 வரை விடுமுறை அளிக்கப்பட்டது.

எண்ணும் எழுத்தும் திட்டம் தொடர்பாக 1 முதல் 3 ஆம் வகுப்பு வரை  கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் ஒன்றிய அளவிலான பயிற்சி வகுப்புகள் 2 ஆம் தேதி முதல் 4 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதன் காரணமாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு மட்டும் 5 ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன் படி நேற்றோடு ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புகள் நிறைவடைந்ததை அடுத்து இன்று முதல் தமிழ்நாடு முழுவதும் உள்ள 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை உள்ள தொடக்கப்பள்ளிகள் வழக்கம்போல் செயல்பட தொடங்கின.

இதையும் படிக்க : சிதம்பரம் : நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா...! தொடங்கிய தேரோட்டம்...!