இந்தியப் பிரதமருடன் பேசிய இஸ்ரேல் பிரதமர்..!

இந்தியப் பிரதமருடன் பேசிய இஸ்ரேல் பிரதமர்..!

பயங்கரவாதத்தை எதிர்த்து இஸ்ரேலுடன் முழுமனதுடன் துணைநிற்பதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினரிடையே 4வது நாளாக தொடரும் போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஆயிரத்து 500ஐ கடந்துள்ளது.

இந்நிலையில் இஸ்ரேல் பிரதமர் தன்னுடன் போனில் உரையாடியதாகவும் அப்போது இந்தியர்கள் நிலை குறித்து கேட்டறிந்ததாகவும், பிரதமர் மோடி தனது  X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்களையும் எதிர்ப்பதாகவும், இக்கடினமான நேரத்தில் இஸ்ரேலுடன் துணை நிற்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.