போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துவரப்பட்ட கைதி தப்பியோட்டம்- நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு

காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த சிறையில் இருந்து அழைத்து வரப்பட்ட குற்றவாளி தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துவரப்பட்ட கைதி தப்பியோட்டம்- நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு

காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம் அருகே மாவட்ட நீதிமன்ற வளாகம் செயல்பட்டு வருகிறது. இங்கு நாள்தோறும் பல்வேறு வழக்குகளுக்கான விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் நாள்தோறூம் பல்வேறு சிறைகளிலிருந்து கைதிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்து வரப்படுகிறது.

இந்நிலையில் இன்று  காலை 10.40 அளவில் காஞ்சிபுரம் நீதிமன்ற வளாகத்திற்கு வழக்கு விசாரணைக்காக ஆஜர் படுத்த சிறையில் இருந்து  குற்றவாளி ஒருவரை போலீசார் அழைத்து வந்துள்ளனர். போலீஸ் பாதுகாப்போடு அழைத்து வந்த குற்றவாளி நீதிமன்ற வளாகத்தில் இருந்து திடீரென போலீசாரை ஏமாற்றி விட்டு சுவர் மீது ஏறி தப்பியோடி விட்டார்.

இதை சற்றும் எதிர்பாராத போலீசார் குற்றவாளியை துரத்தி சென்றும் பிடிக்க முயன்றனர். ஆனால் அவர்களது முயன்றி தோல்வியுற்றது. திடீரென நடைபெற்ற இச்சம்பவத்தால் நீதிமன்ற வளாகத்தில் இருந்த பொதுமக்களுக்கும், வழக்கறிஞர்களுக்கும்,என்ன நடந்தது என்றே தெரியாமல் திகைத்து நின்றனர். இதனால் காஞ்சிபுரம் நீதிமன்ற வளாகத்தில் திடீர்  பரபரப்பு ஏற்பட்டது.