கோழி பண்ணைக்குள் புகுந்த தனியார் பேருந்து.. பறிபோன 2,000-க்கும் மேற்பட்ட கோழிகளின் உயிர்!

மதுரையில் இருந்து தேனி நோக்கி சென்ற தனியார் பேருந்து கோழி பண்ணைக்குள் புகுந்து விபத்துக்குள்ளானதில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிகள் உயிரிழந்தன.

கோழி பண்ணைக்குள் புகுந்த தனியார் பேருந்து.. பறிபோன 2,000-க்கும் மேற்பட்ட கோழிகளின் உயிர்!

மதுரையில் இருந்து கம்பத்திற்கு புறப்பட்ட தனியார் பேருந்து, ஆண்டிபட்டி அடுத்த டி.பொம்மிநாயக்கன்பட்டி பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரத்தில் அமைந்திருந்த கோழிப்பண்ணைக்குள் புகுந்து விபத்துக்குள்ளானது.

இதில் பண்ணையில் இருந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிகள் உயிரிழந்தன, பேருந்தில் பயணித்த 30க்கும் மேற்பட்ட பயணிகள் காயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ஆண்டிபட்டி போலீசார் காயமடைந்த பயணிகளை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.