தனியார் பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்து...அதிஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்...

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து அரியலூர் நோக்கி வந்த தனியார் பேருந்து மண்ணியாற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனியார் பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்து...அதிஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்...

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து அரியலூர் நோக்கி வந்த தனியார் பேருந்து,  திருப்பனந்தாள் அருகே உள்ள பட்டம் பகுதி அடுத்த மண்ணி ஆற்று பாலத்தின் அருகே நிலைதடுமாறி கவிழ்ந்தது.

இந்த விபத்தை கண்ட அங்கிருந்தவர்கள், பேருந்தில் பயணம் செய்த பயணிகளை பத்திரமாக மீட்டனர். பின்னர் இது தொடர்பாக திருப்பனந்தாள் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், விபத்து குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.