அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடத்த தனியாருக்கு அனுமதி!  

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடத்த தனியாருக்கு பள்ளிக்கல்வித்துறை  அனுமதி அளித்துள்ளது.

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடத்த தனியாருக்கு அனுமதி!   

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடத்த தனியாருக்கு பள்ளிக்கல்வித்துறை  அனுமதி அளித்துள்ளது.

இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், 6 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கணிதம், அறிவியல் பாடங்களை WhatsApp  மற்றும் Google Meet-ல் நடத்த தனியார் அமைப்புக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு எந்த விதத்திலும் பாதிக்கப்படக் கூடாது என்று தனது உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 18 மாவட்டங்களில் அறிவியல் மையங்கள் மற்றும் நகரும் அறிவியல் ஆராய்ச்சிக் கூடங்கள் அமைக்கவும் அகஸ்தியா பன்னாட்டு நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் கற்றல், கற்பித்தல் திறன் பாதிக்கப்படாத வகையில் ஒத்துழைப்பு வழங்குமாறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அகஸ்தியா நிறுவனத்தின் அறிவியல் சார்ந்த செயல்பாடுகளை கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பவும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுவரை இந்த நிறுவனம் 20 மாநிலங்களில் இதுபோன்று கல்விசேவை அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.