மதுரையில்  ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு பலூன், கருப்புகொடி... 100க்கும் மேற்பட்டோர் கைது!

மதுரையில்  ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு பலூன், கருப்புகொடி... 100க்கும் மேற்பட்டோர் கைது!

மதுரையில்  ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு பலூன் பறக்கவிட்டும், கருப்புகொடி ஏந்தியும் போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் 55-வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க வருகை தந்த ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என கம்யூனிஸ்ட் கட்சியினர் அறிவித்திருந்தனர். 

அதன்படி சுதந்திரப் போராட்ட வீரர் என். சங்கரய்யாவிற்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்க தமிழக அரசு பரிந்துரைக்கு ஒப்புதல் வழங்காததை கண்டித்தும், சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு ஒப்புதல் வழங்க மறுக்கும் தமிழக ஆளுநர் ஆர் என்  ரவியை கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாகமலைப்புதுக்கோட்டை பகுதியில் 150க்கும் மேற்பட்டோர் கருப்பு பலூன் பறக்கவிட்டும், கருப்புக் கொடி ஏந்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது ஆளுநருக்கு எதிராகவும் மத்திய அரசுக்கு எதிராகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

இதனையடுத்து காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய முயன்றபோது கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும், காவல்துறையினருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.