இஸ்ரேல் ராணுவ தாக்குதலை நிறுத்தக் கோரி சென்னையில் போராட்டம்..!

இஸ்ரேல் ராணுவ தாக்குதலை நிறுத்தக் கோரி சென்னையில் போராட்டம்..!

சென்னை எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில்  பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அனைத்து கட்சிகளின் கூட்டமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

சில நாட்களாகவே இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனர்களுக்கு இடையே போரனது மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இரு தரப்பிலும் பல உயிர்கள் பலியாகும் நிலையும், தொடர்ந்து வந்தது.

இரண்டு தரப்பினருக்கும் பல்வேறு நாடுகள் தங்களது ஆதரவையும், பல நாடுகள் கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றன. அந்த வகையில், இஸ்ரேல் ராணுவ தாக்குதலை நிறுத்தக் கோரி பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அனைத்து கட்சிகளின் கூட்டமைப்பினர் சேர்ந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. 

திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி, தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழக தலைவர் ஜவஹாருல்லா, மே 17 இயக்கத்தின் தலைவர் திருமுருகன் காந்தி, விசிக தலைவர் திருமாவளவன்,  மற்றும் முஸ்லீம் பெண்கள் உள்பட 1000-திற்கு மேற்பட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

இதையும் படிக்க  | அதிகாரிகள், காவல்துறையினருக்கு டிஜிபி பாராட்டு..! விடுமுறை அளிக்க உத்தரவு..!