ஜூன் 10ம் தேதி பாமக சார்பில் போராட்டம் - அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு

ஜூன் 10ம் தேதி பாமக சார்பில் போராட்டம் - அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய அவசர சட்டம் பிறப்பிக்கக்கோரி, வரும் 10ம் தேதி பாமக சார்பில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என, அக்கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதில், தமிழக அரசின் ஒவ்வொரு நாள் தாமதமும், ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு இழைக்கப்படும் துரோகம் என்றும், ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எதையும் அரசு மேற்கொள்ளவில்லை என்பது மிகவும் வேதனையளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கத்திற்கு அருகில், வரும் 10ஆம் தேதி ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய அவசர சட்டம் இயற்ற வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து போராட்டம் நடைபெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.