திடீர் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்...! விளைநிலங்களை சேதப்படுத்தும் பன்றிகளை பிடிக்க கோரிக்கை..!

விளைநிலங்களை சேதப்படுத்தும் பன்றிகளை பிடிக்க வலியுறுத்தி பொதுமக்கள், விவசாயிகள் சாலை மறியல்..!

திடீர் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்...! விளைநிலங்களை சேதப்படுத்தும் பன்றிகளை பிடிக்க கோரிக்கை..!

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கட்டிமேடு கிராமத்தில் பன்றிகள் தொல்லை அதிகரித்து வருகிறது. கட்டிமேடு, ஆதிரெங்கம், சேகல் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள குறுவை சம்பா பயிர்களை பன்றிகள் நாசம் செய்கின்றன. அதோடு, பொதுமக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் இந்த பன்றிகளை பிடிக்க வலியுறுத்தி பொதுமக்கள், விவசாயிகள் பல முறை அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்காததாக கூறப்படுகிறது. 

அதனால் இன்று, கட்டி மேடு பள்ளிவாசல் அருகில் பொதுமக்கள், விவசாயிகள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதனால் திருத்துறைப்பூண்டி - வேதாரண்யம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த வட்டாச்சியர் மலர்கொடி, ஆய்வாளர் கழனியப்பன், வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.