திமுக வாய்சொல் வீரர்களால் பொதுமக்களுக்கு இன்னல் - ஈபிஎஸ் கடும் கண்டனம்!

திமுக வாய்சொல் வீரர்களால் பொதுமக்களுக்கு இன்னல் - ஈபிஎஸ் கடும் கண்டனம்!

திமுக வாய்சொல் வீரர்களால் இரண்டு நாள் மழைக்கே தமிழக மக்கள் இன்னலை சந்தித்து வருவதாக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, மழைநீர் வடிகால் பணிகள் முடிவடைந்தது குறித்து முதலமைச்சர் அறிவிப்புக்கும், அமைச்சர் கே.என். நேருவின் அறிவிப்புக்கும் முரண்பாடு இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: 2021ல் 700 இடங்கள்... ஆனால் 2022ல் வெறும் 40 இடங்கள் தான்...அமைச்சர் மா.சுப்பிரமணியம் பேச்சு!

திமுக அரசு அறிவித்தப்படி பணி முடிந்திருந்தால் இருநாள் மழைக்கு இவ்வளவு தண்ணீர் தேங்க வாய்ப்பு இல்லை என கூறியுள்ள எடப்பாடி பழனிச்சாமி, திட்டமிடாத பணிகளால் சென்னையில் எங்கு பார்த்தாலும் தோண்டப்பட்ட பள்ளங்கள் மட்டுமே இருப்பதாகவும் கூறியுள்ளார்.

ஆட்சிக்கு வந்து 18 மாதங்கள் ஆகியும் இன்னும் அதிமுக ஆட்சி காலத்தை குறை கூறி வருவது, மக்களை திசை திருப்பும் வேலை என்றும் கூறியுள்ளார். எதிர்காலத்தில் இது போன்ற நிலையை திமுக அரசு தடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.